Friday, January 27, 2012

துரோக மலர்




கணக்கற்ற துரோகங்களை நிகழ்த்தினோம்
யார் யாரை துரோகித்தோம் என்பதை
அத்தனை எளிதில் 
எவராலும் கண்டுணரமுடியவில்லை
நாங்கள் வசித்திருந்த பள்ளத்தாக்கு முழுவதும்
குரூரச் சிவப்பில் துரோகத்தின் மலர்கள். 
பதறி ஓடினோம்
திசைக்கொருவராய் பதுங்கினோம்
விரல்களின் வழி பாவிய வேர்களை
துண்டித்துக் கொண்டோம்
பின்பொரு விடியலில்
தீவின் மேற்கூரையில் நின்றபடி
வெள்ளி நட்சத்திரத்திற்கு
சமீபமாய்
நீலமாய் ஒரு பூ பூத்திருந்ததைப் பார்த்தேன்.

No comments:

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...