கங்கா,
இந்த நாளில் எழுதுவதற்கென என்னிடம் வார்த்தைகள் இல்லை.எப்போதோ படித்த இந்த கவிதை இந்த நாளினை கண்முன் நிறுத்துவதால் ..
கிழிக்கப்படாத நாட்காட்டி
புதுப்பிக்கப்பட்ட வலியைப்
பூசிக்கொண்டு வளையவரும் வீடு
உனக்குப் பிரியமானவை
பற்றிய எங்களின் பரிமாறல்கள்.
நீ வளர்த்த இன்னும்
பூக்கும் செடிகள்.
நாம் படித்த புத்தகங்கள்
நீ வாழ்ந்ததின் அறிகுறிகள்
தொலைக்கும் உலகம்.
பூஜைக்காய் பிரத்யேகமாய்
தேய்த்து அலம்பிய
பித்தளை,வெள்ளி.
நிஜம் தேய்ந்து
தெய்வமாகிப் போன
நீயற்று விடிந்த
இன்னும் ஒரு தினம்
- நன்றி கனிமொழி:கருவறை வாசனை..
Sunday, January 4, 2009
Featured Post
King Pele : அஞ்சலி
சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...

-
என்னுடைய மிக விரிவான நேர்காணலை அரூ இதழ் வெளியிட்டிருக்கிறது. என் ஒட்டு மொத்த இலக்கியப் பங்களிப்பையும் இருப்பையும் கேள்விகளாகத் தொகுத்த நண்ப...
-
அ றிவார்ந்த சமூகம் என கேரளத்தை அடையாளம் காட்டுவோர் உண்டு. நானும் சில கூறுகளில் கேரளத்தவரே முன்மாதிரி என்பேன். ஆனால் இன்றும் சாதியப் பெருமிதத...
-
’லா க்டவுன்’ காலத்தை நூரி பில்கே சிலானுடன் தான் துவங்கினேன். இனி அலுவலகம் வரத் தேவையில்லை என்கிற விடுதலை உணர்வு, முன் நின்ற பூச்சி பயத்தை ...