நதியின் விரிவுகளை
குளுமைகளை
சலனமில்லா அடி மணற் தணிவுகளை
கரையோர சலசலப்புகளை
எங்கிருந்து வருகிறது
எங்கு முடிகிறது
எனும் புதிர்களுக்கான துவக்கங்களை
ஒருபோதும் எதிர்கொண்டதில்லை
கண்ணுக்கெதிரில் மண் குழம்பலாய்
நுரைப்படலமாய்
இரு கரைகளையும் தொட்டபடி
சுழியிட்டு ஓடிக்கொண்டிருக்கிறது
ஆறு...
......... 0 ..............
நதிகள் வற்றாதாமே
அப்படியா?
நதிகள் பிரம்மாண்டமானவையாமே
அப்படியா?
நதியோர கரைகளில்
உயரமான மரங்கள்
மிக அழகாய் பூத்திருக்குமாமே
அப்படியா?
..............
எப்போதும் இருக்கிறது
நதிகளுக்கான ஏக்கம்...
......... 0 ..............
செயற்கை நீரூற்றுக்கள்
மூத்திரம் பெய்வதை
நினைவுபடுத்துகிறது
தேவை ஒரு
நதி
......... 0 ..............
நதிகள் வற்றுவதில்லை
ஆனால் சாக்கடை கலந்த நதியுண்டு
பூக்கள் மிதக்கும் நதி மிகவும் அழகானது
ஆனால் பிணங்களும் இப்போது நதியில்தான்
மிதக்கின்றன..
......... 0 ..............
நதிகளோடு புதிர்களும்
புதிரின் பின்னால் அலைவுகளும்
அலைவின் பின்னால் சோர்வுகளும்
சோர்வின் பின்னால் வெறுமைகளும்
வெறுமைக்குப் பின்
போடா ங்கோத்தா தான்!
......... 0 ..............
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
King Pele : அஞ்சலி
சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...

-
என்னுடைய மிக விரிவான நேர்காணலை அரூ இதழ் வெளியிட்டிருக்கிறது. என் ஒட்டு மொத்த இலக்கியப் பங்களிப்பையும் இருப்பையும் கேள்விகளாகத் தொகுத்த நண்ப...
-
அ றிவார்ந்த சமூகம் என கேரளத்தை அடையாளம் காட்டுவோர் உண்டு. நானும் சில கூறுகளில் கேரளத்தவரே முன்மாதிரி என்பேன். ஆனால் இன்றும் சாதியப் பெருமிதத...
-
’லா க்டவுன்’ காலத்தை நூரி பில்கே சிலானுடன் தான் துவங்கினேன். இனி அலுவலகம் வரத் தேவையில்லை என்கிற விடுதலை உணர்வு, முன் நின்ற பூச்சி பயத்தை ...
3 comments:
இது கவிதையில்ல! முடியத்துவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கவுஜ! :)
ம்ம்ம்...நல்லாயிருக்கு.
//செயற்கை நீரூற்றுக்கள்
மூத்திரம் பெய்வதை
நினைவுபடுத்துகிறது
தேவை ஒரு
நதி//
''கொண்டாடுகிறேன்''
Post a Comment