Thursday, October 11, 2007

பொதுப்படுத்தி மகிழ்தல்



கொன்றை மரங்களைப் போலில்லை
இப் பேரீச்சைகள்
மஞ்சணத்திப் பூச்செடிகளையோ
அடர்வாய் பூக்கும்
ஆவாரம் பூச்செடிகளையோ போலில்லை
இந்த தொட்டிப் பூச்செடிகள்
இருப்பினும்
இவற்றைப் பார்க்கும்போது
அவற்றை நினைக்காமல் இருக்க முடிவதில்லை
அவையாய் இல்லாமலே
அவற்றை நினைவுபடுத்துவது
இவற்றின் சிறப்பா? அல்லது
நினைவு கொள்ளும் நினைவின் சிறப்பா?
எது எப்படியோ
மரங்களும் பூக்களும் அழகானவை....

3 comments:

ஆடுமாடு said...

நன்றாக இருக்கிறது.

//எது எப்படியோ
மரங்களும் பூக்களும் அழகானவை...//
உங்கள் கவிதைகளை போல என்று சொல்லலாம்தான்.
http://aadumaadu.blogspot.com

நாகை சிவா said...

//எது எப்படியோ
மரங்களும் பூக்களும் அழகானவை....//

என்றென்றும் :)

நிலா said...

அந்த படத்தில் இருப்பது ஆவாரம்பூ தானே

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...