பின்னிரவில்
சத்தம் இல்லாது
பெய்துவிட்டுப் போன
மழைக்கு
காலையில்
வெள்ளையாய் மென்மையாய்
பூத்திருக்கிறது
பச்சரிசிக் காளான்கள்..
யாருமற்ற
எனதறைக்குள்
திடுமென நிகழ்ந்த
உன் ப்ரவேசத்தில்
உறைந்து போனது
எனது பகலும் அதன்
தொடர்ச்சியாய் இரவும்..
இன்னுமொரு
சிதைவிற்கான
ஆயத்தங்களெனினும்
பூத்திருப்பதும்
உறைந்து போவதும்
இருத்தலியத்தின்ஆதார விதிகள்.
Sunday, March 11, 2007
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
King Pele : அஞ்சலி
சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...

-
அ றிவார்ந்த சமூகம் என கேரளத்தை அடையாளம் காட்டுவோர் உண்டு. நானும் சில கூறுகளில் கேரளத்தவரே முன்மாதிரி என்பேன். ஆனால் இன்றும் சாதியப் பெருமிதத...
-
என்னுடைய மிக விரிவான நேர்காணலை அரூ இதழ் வெளியிட்டிருக்கிறது. என் ஒட்டு மொத்த இலக்கியப் பங்களிப்பையும் இருப்பையும் கேள்விகளாகத் தொகுத்த நண்ப...
-
’லா க்டவுன்’ காலத்தை நூரி பில்கே சிலானுடன் தான் துவங்கினேன். இனி அலுவலகம் வரத் தேவையில்லை என்கிற விடுதலை உணர்வு, முன் நின்ற பூச்சி பயத்தை ...
5 comments:
பச்சரிசிக் காளான்கள்..
நல்லா இருக்கு.
மென்மையா இருக்கு கவிதை.
நிறைய எழுதுங்க!
கவிதையை வாசித்ததும் தெரிந்துவிடுகிறது நல்ல கவிதை என்று. ஆனால், 'நல்ல கவிதை'என்று சொல்லி விட்டுக் கடந்துபோய்விடுவதைத் தவிர கவிதை தரும் அனுபவத்தைப் பற்றி மேலதிகமாகச் சொல்ல ஒன்றுமேயில்லாது போவதேன்? தரமாக இருக்கிறது உங்கள் எழுத்து.
நன்றி மஞ்சூர் ராசா மற்றும் தம்பி
'நல்ல கவிதை'என்று சொல்லி விட்டுக் கடந்துபோய்விடுவதைத் தவிர கவிதை தரும் அனுபவத்தைப் பற்றி மேலதிகமாகச் சொல்ல ஒன்றுமேயில்லாது போவதேன்?
காட்சிப் படிமங்களை நான் நம்பாதது கூட ஒரு காரணமாய் இருக்கலாம்
மிகவும் நன்றி உங்கள் கருத்துகளுக்கு
//யாருமற்ற
எனதறைக்குள்
திடுமென நிகழ்ந்த
உன் ப்ரவேசத்தில்
உறைந்து போனது
எனது பகலும் அதன்
தொடர்ச்சியாய் இரவும்..
//
!!!
Post a Comment