வசீகரமற்ற கவிதை
சுயம்
தனி அடையளத்திற்கான
விழைதலின் பொருட்டு
தேர்ந்தெடுக்கிறது
இருப்பதிலேயே கடினமான
ஒரு சொல்லை....
மறுதலிக்கப்பட்ட
சொற்கள்
முடிவற்ற வெளியில்
பயணிக்கின்றன
மற்றுமொரு கவிஞனின்
இருப்பிடம் தேடியபடி..
இருப்பு குறித்த
அவஸ்தைகள்
எதுவமற்ற கவிஞன்
சூல் கொண்ட மேகத்தை
கலைக்கும் புயலைப்போல
தேர்ந்தெடுத்த சொற்களைக்கூட
இரக்கமற்ற பேனாவைக்கொண்டு
அழிக்கிறான்....
வசீகரமிழந்த சொற்கள்
மெல்ல உதிர்க்கின்றன
கவிதைக்கான வேட்கையையும்
இருத்தலின் நம்பகத்தன்மையையும்...
முடிவற்ற வெளியிலிருந்து
எழும் விசும்பல்கள்
ஏதேனும் ஒரு சுயத்தை
அசைக்கும் சிறுபொழுதில்
எழுதப்படுகிறது
வசீகரமற்ற
தட்டையான
ஒரு கவிதை......
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
King Pele : அஞ்சலி
சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...

-
Mubi தளத்தில் கீஸ்லோவெஸ்கி, ஹெடரோவ்ஸ்கி, ஆக்னஸ் வர்தா, சாப்ளின், டிண்டோ ப்ராஸ், எரிக் ஹோமர் போன்ற பிரபலமான இயக்குநர்களின் படங்களைத் தவிர்த...
-
’லா க்டவுன்’ காலத்தை நூரி பில்கே சிலானுடன் தான் துவங்கினேன். இனி அலுவலகம் வரத் தேவையில்லை என்கிற விடுதலை உணர்வு, முன் நின்ற பூச்சி பயத்தை ...
-
அ றிவார்ந்த சமூகம் என கேரளத்தை அடையாளம் காட்டுவோர் உண்டு. நானும் சில கூறுகளில் கேரளத்தவரே முன்மாதிரி என்பேன். ஆனால் இன்றும் சாதியப் பெருமிதத...
5 comments:
நன்றாக இருக்கிறது இந்த கவிதை. ஆனாலும் யாரோ ஒருவருடைய நடையை நினைவுப்படுத்துவதை சொல்லாமல் இருக்கமுடியவில்லை.
அருமையான கவிதை. இப்படியெல்லாம் கூட யோசிக்க முடியுமா என்று யோசித்தேன் :)
//
மறுதலிக்கப்பட்ட
சொற்கள்
முடிவற்ற வெளியில்
பயணிக்கின்றன
மற்றுமொரு கவிஞனின்
இருப்பிடம் தேடியபடி.. //
amazing !!
உங்க கவிதைகள் ஒரு கவிஞனின் தெறித்தல்களா இருக்கு. matured ஆகவும் இருக்கிறது. தமிழ்மணத்தில் நல்ல கவிஞர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு உங்கள் கவிதைகள் நல்ல எடுத்துக் காட்டு. கொஞ்சம் abstract level-ஐ குறைச்சுக்கலாமோன்னு தோணுது. ஆனா அது என் அபிப்ராயம்தான். உங்க்ளுக்கு எது சரின்னு படுதோ அதைச் செய்யுங்க.
நன்றி கணேஷ்
உங்கள் கருத்துக்கு நன்றி யாழினி அத்தன் :)
உங்கள் பெயர் தனி வசீகரம் ..:)
//மறுதலிக்கப்பட்ட
சொற்கள்
முடிவற்ற வெளியில்
பயணிக்கின்றன
மற்றுமொரு கவிஞனின்
இருப்பிடம் தேடியபடி..
//
கவிதை எழுதும்போது நிராகரிக்கப்படும் சொற்கள் என்னவாகும்னு நானும் கூட யோசிச்சிருக்கேன். என் கேள்விக்கு இந்த பதில் அழகா பொருந்துது!
Post a Comment