இருத்தலின்
நிரூபண சித்திரங்களை
வெளிறச் செய்கிறது
காலம்.....
முன் மாதிரிகளின்
பிரம்மாண்டங்களில்
ஒன்றுமில்லாததாகிறது
கிளர்ந்தும் திரண்டும்- எழும்
அடர்த்தியற்ற வடிவமற்ற
உள்ளெழுச்சிகள்...
இருப்பினும்
தினம் பூக்கும்
பூக்கள்
எதை நிரூபிக்கிறது
பூத்திருத்தலைத் தவிர்த்து?..
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
King Pele : அஞ்சலி
சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...

-
Mubi தளத்தில் கீஸ்லோவெஸ்கி, ஹெடரோவ்ஸ்கி, ஆக்னஸ் வர்தா, சாப்ளின், டிண்டோ ப்ராஸ், எரிக் ஹோமர் போன்ற பிரபலமான இயக்குநர்களின் படங்களைத் தவிர்த...
-
’லா க்டவுன்’ காலத்தை நூரி பில்கே சிலானுடன் தான் துவங்கினேன். இனி அலுவலகம் வரத் தேவையில்லை என்கிற விடுதலை உணர்வு, முன் நின்ற பூச்சி பயத்தை ...
-
அ றிவார்ந்த சமூகம் என கேரளத்தை அடையாளம் காட்டுவோர் உண்டு. நானும் சில கூறுகளில் கேரளத்தவரே முன்மாதிரி என்பேன். ஆனால் இன்றும் சாதியப் பெருமிதத...
7 comments:
"இருப்பினும்
தினம் பூக்கும்
பூக்கள்
எதை நிரூபிக்கிறது
பூத்திருத்தலைத் தவிர்த்து?.."
வெகு அருமையான நுட்பமான கவிதை பாராட்டுக்கள்
பங்கேற்க வாருங்கள், உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்..
அன்புடன் கவிதைப் போட்டி
கடைசித் தேதி ஏப்ரல் 14 :-)
நல்ல வரிகள். தொடர்ந்து எழுதுங்கள்.
நன்றி செல்வநாயகி
உங்களின் 'சாத்தப்பட்ட' பதிவு எனக்கு மிகவும் பிடித்த பதிவுகளில் ஒன்று
உங்களின் ஊக்கம் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது
/வெகு அருமையான நுட்பமான கவிதை பாராட்டுக்கள்/
மிகவும் நன்றி கென்
அழைப்பிற்க்கு நன்றி சேதுக்கரசி
//முன் மாதிரிகளின்
பிரம்மாண்டங்களில்
ஒன்றுமில்லாததாகிறது
கிளர்ந்தும் திரண்டும்- எழும்
அடர்த்தியற்ற வடிவமற்ற
உள்ளெழுச்சிகள்...//
மிகவும் உண்மை. எந்த பாதையில் பயணித்தாலும் அதில் ஏற்கனவே அநேகம் பேர் அல்லது யாரோ ஒருவராவது பயணித்திருப்பதை உணரமுடிகிறது. இன்னொன்று தானா நான் என்ற கேள்வியும் எழுந்து அயர்ச்சியடையச் செய்கிறது. but thats how life is !!
சின்ன கவிதை நிறைய யோசிக்க வைக்கிறது. Good one !!
Post a Comment